Saturday, December 28, 2013

வாழ்க நீ ...



வளம் கொழிக்கும்
கார் கார்த்திகை மாதம் ஈன்ற
இனம் சுமந்த
என் தலைவன் பிறந்த பொன்னாள் இது

தாய் தனம் சுமந்த
வீரப் பால் குடித்து
மறவர் குலம் வளர்ந்த
வீர வேங்கை இவன்
கரம் பிடித்து
கை கோர்த்து
இனம் காக்க
விதையாக வீழ்ந்த
மறவர் மாவீரர் கல்லறை
வணங்கும் கர்ம வீரனிவன் ...

கர்ணன் படித்ததுண்டு
அர்ஜீனன் படித்ததுண்டு
தர்மன் படித்ததுண்டு
சாணக்கியன் படிதததுண்டு
உன்னை மட்டுமே பார்த்ததுண்டு ...

பத்து திங்கள் சுமந்த
பார்வதி அம்மா
கொண்ட கர்வம் வெல்லும்
உன்னை கணம் தோறும்
மனம் சுமக்கும்
பார் வாழும்
ஈழ அம்மாக்கள் கர்வம் ...

கார்த்திகை ஈன்ற
கரிகால வேங்கையே
உன் கருவிழி கொண்ட
கனவுகள் வாழுமே ...
உன் மனமேந்தும் கனவுகள் கோடி
உன் சுகம் நாடும் உறவுகள் கோடி
உன்னை விழி பார்க்க
தவங்களும் கோடி
வீழாத மறவன் நீ ...

அகவை அறுபதை எட்டும்
அழகான தலைவனே
அகவை ஐந்து நூறு கண்டாலும்
அகமெங்கும் குழந்தையே
உலகமெங்கும்
உனக்காக இன்று தூளி ஆடும் ..
உன் ஒரு வார்த்தைக்காக
செவிகள் ஏங்கும் ...

உன்னை கடந்த காலம் என்கின்றனர்
உன்னை முடிந்த கதை என்கின்றனர் ..
காலம் வென்றவன் முடிவதில்லை
கடமை வீரன் தோற்பதில்லை
நீ வரும்வரை நீளும் மௌனம்
நீ வராது போகினும்
நீ வாழும் தெய்வம் ...

அதுவரை ...
என் தந்தை போன்றவனே வாழி நீ
என் தாயுமாணவனே வாழி நீ
என் மாமன் குணம் கொண்டவனே வாழி நீ
என் இனம் காக்கும்
இமயமே வாழ்க வாழ்க நீ ...

No comments:

Post a Comment