Saturday, December 28, 2013

கனவுகள் மீள...


****

உனக்காக கழிந்த
ஒவ்வொரு நிமிடத்தின்
உருகிய மனத் துளிகள்
மணித்துளியின் இறுதியில்
மதிப்பிழந்து போனது ஏன் ... ?

கடக்கின்ற காற்றை கேட்டேன்
தழுவிச் செல்லும் தென்றலை கேட்டேன்
மனதில் வீசும் புயல்
மருந்தளவேனும் தெரிகிறதா ?
சுழலில் சிக்கி
அசையாமல் அமர்ந்து சிரிக்கும்
அவன் புன்னகை
அணுவேனும் கலைகிறதா ?

உதட்டுக்கும் மனதுக்கும்
அணுவேனும் சமந்தமுண்டோ
மனதின் வலிகள் எதுவும்
உதட்டில் தெரிவதில்லை ..
உதடுகள் உதிர்த்த சொல்
உள்ளத்தை கிழிக்காமல் இல்லை ...

மங்கி விட்ட மாலை வெயிலில்
மறைந்துவிட்ட உன்
வரவு என்னுள் எழுதிச் செல்கிறது
வருங்கால வசந்தம்
மலர்கள் உதிர்க்கும்
மரக் கிளை என்று ..

கடந்த கால கவலைகள் பெரிதா
நிகழ கால நினைவுகள் இனிதா
எதிர்கால ஏக்கங்கள் எனதா
உள்ளத் தவிப்பு எழுதும்
உருக்கமான மடல் திறந்து
கன்னக் குழி நிரப்பும்
கனிவான முத்தமொன்று பகிர்ந்துவிடு ...
கனவுகள் மீள ...

No comments:

Post a Comment