Saturday, December 28, 2013

அவனுக்கு மட்டும்....




வெள்ளி வீழ்ந்த
ஓர் அமாவசை இரவு ..
அமானுஷ்யம் கூட
அரண்டு கொள்ளும்
அந்தகாரம் ..
அவனுக்கு மட்டும்
அது எதுவும் தெரியவில்லை ...

ஆங்காங்கே தெரியும்
வீதி விளக்கின்
குமுள் உதிர்க்கும்
குறுகிய ஒளியினுள்
தன இருண்ட வாழ்வை
சிறிது
ஒளியூட்டி உறங்குகின்றான் ...

வறுமையின் ரேகை
வலுவாக தெரிகிறது ..
செருப்பில் இருக்கும்
சிறிது செருக்கு கூட
அவன் தோற்றத்தில் காணோம்
அருகிருக்கும் நீர் பாட்டில்
அவனதாய் இருக்குமா ...
ஐயோ பாவம் என
ஆராவது கொடுத்திருப்பாரோ .....

புண்ணியவான்களும்
இந்த பூமியில் உண்டா ?
இருந்தால் புழுதியில் புரளும்
புருஷனாய் உன்
அவதாரம் இங்கு எப்படி சாத்தியம் ?

வல்லரசு கனவு
வகை வகையாய் சுக போக உணவு
வாரி கொடுக்கும் கஜானா கதவு
சொப்பன லோகத்து
அரசர்களுக்கு ஏது
நாயோடு சேர்ந்து
நடு வீதியில் உறங்கும்
நம்மவர்கள் நிலை புரியும் ... ?

நாய் கூட நன்றாக இருக்குது ..
நாய்க்கும் கெட்ட பொழப்பு உனக்கு ..
நாட்டினை நன்றி கெட்ட இதுகள் ஆண்டால்
நாளை நமக்கும் நிலை இதுதான் ...

கவலையின்றி உறங்குபவனே
கவனமாய் உறங்கு
காலனை விட கொடியவர்க்கு
உன்னைப்போல் அப்பாவிகள் தேவையாம்
அவர்கள் தப்பிக்க ...

No comments:

Post a Comment