Saturday, December 28, 2013

முத்தச் சுவை ...


கனவுகள் சுமக்கின்ற
அதிகாலைகள் பூக்கின்றன
நினைவு மலர்களை ,
இதழ் சிந்தும்
சிறு துளி நீரில்
மலரின்
ஏக்கம் கலந்து சிதறும் ..

அவிழாத மொட்டின்
அவிழ்தளுக்காக
ஆங்காங்கே ரீங்காரமிடும்
வண்டுகளின் சத்தம்
மலர் மௌனம் கலைக்கும் ...

பிரியாத இருள் களைந்து
மெல்ல விடிகாலை
ஆடையுடுத்தும்
பச்சை பகலவள்
மேனியெங்கும்
ஒளிரும் வைரமென
மிளிரும் பனித்துளி...

செந்தாள் சந்தனமென
குழைத்து மேனியெங்கும்
மிளிரும் மஞ்சள்
வர்ணம் விரவி
புரவி ஏறி
புகார் கலைக்கும் கதிரவன் ..

எங்கும் புலர்தலின் வர்ணம்
புதிதாக தெளித்துச் செல்லும்
குளிர்கால விடியல் ஒன்றில்
எண்ணம் வடியாது மையலுறும்
தையலிவள் கன்னமெங்கும்
குளிர் காற்று எழுதி செல்லும்
சில எச்சில் தெறித்த
முத்தச் சுவை ...


No comments:

Post a Comment