Saturday, December 28, 2013

முத்தம்


****

நிலவொழுகும்
ஒரு பொழுதில்
உன் இதழ் தடவி
வழிந்த முத்தம்
வலியை பகிர்ந்து சென்றது ...

எதிர் பார்ப்புகள்
ஏமாற்றங்கள் ஆகும் பொழுது வலிப்பதில்லை
எதற்காகவோ எனும் பொழுது
வலியை தவிர
அது எதையும் தருவதில்லை...

அதற்கு பிறகான
எந்த வார்த்தைகளும்
ரசிப்பதில்லை
உன்னால் அனுப்பப் பட்ட
மேகத் திரள் ஒன்று
என்னுள் மோக துகள் வீசி
மெல்ல நகர்கிறது
அதன் துகள் அனைத்திலும்
விம்பம் ....
நெருப்பென எனை சுடுகிறது

வழிகின்ற நீர் துளி ஒன்று
வாஞ்சையோடு சொன்னது
நான் இருக்கிறேன்
உனக்கே உனக்காய் ...

No comments:

Post a Comment