Saturday, December 28, 2013

இளமை மயக்கம்...



நார் இழையோடும்
அழகிய மலரைப்போல்
மனதோடு இழையும்
நினைவுகள் அனைத்திலும்
மெல்லிய
சுகந்தத்தை பரப்பிச் செல்கிறது
நினைவு சுமந்த
மகரந்த தென்றல் ....

தூங்கும் உணர்வுகளில்
பரவும் அதன் சுகந்தங்கள்
உறங்கும் உள்ள கிளர்சிகளை
உராய்ந்து செல்கிறது ..
பற்றிக்கொள்ளும்
பஞ்சென மனமும்
பார்வை படரும் இடமெங்கும்
அதன் வெம்மையை விரவிப் படர்கிறது ...

அதன் காங்குகள் எங்கும்
தெரியும் உன் முக தரிசனங்கள்
மூச்செங்கும்
வெம்மையை வீசி விசிக்கிறது ...

எதோ இனம் புரியாத உணர்வுகள்
அதன் தேவைகளின் வினாக்களை
விதைத்து வாளர்ந்து செல்கிறது
வானளாவும் அதன் தேவைகளுக்கு
தீர்வு ஒரு புன்னகையா
ஒரு இதழ் ஒற்றுதலா
அன்றில் இளமையின் பரிமாறுதலா ?

உன் கை வளைவுகளுக்குள்
காதலும் காமமும் அடங்கிவிடுமா ?
காந்தப் பார்வையில்
புலங்களை தாண்டிய
கதிர் வீசிடுமா ?
இல்லை
கடைசிவரை
ஏக்கங்களும்
எடுத்து சொல்ல முடியாத
எண்ணற்ற உணர்வுப் பிதற்றல்களும்
எஞ்சி விஞ்சி
வஞ்சி இவளை இம்சிக்குமா ?
வார்த்தை ஒன்று பகிர்ந்து விடு
இளமையின் மயக்கம்
இனிதே .........

No comments:

Post a Comment