Saturday, December 28, 2013

மலர் இதழ்கள்..


****

இரவு நேரத்து மின் மினிகள் என
மினு மினுத்து சிரிக்கிறது
என் மீதான உன் அன்பு ....
அடங்காத காதலுக்குள்
அமிழ்ந்துவிட்ட மோக முட்கள்
ஒவோன்றின் மேலும்
ஊசிமுனைத் தவம் செய்கிறது மனம் ...

கழல் தீண்டும்
கரிய தேக்குகள் என
மினு மினுத்த கரம் தன்னில்
சிக்கிய கால்கள் இரண்டும்
உன் கைக்கியைவாய்
நர்த்தனம் ஆடுவது விந்தை ...

கொடியை படர்ந்த அரியென
பிடரிக் குழல் நுழைந்து
கோதி இழுக்கும்
விரகம் பகிர்ந்து நிமிர்ந்து
திமிறும் கட்டுடல்
களைந்து சிதறும்
உப்புநீர் சுவைக்கும்
ஒரு மலர் ....

திண்ணிய மெல் மலை படர்ந்து
ஊறும் அமுது துளைந்து
அருவி மருவும்
கள்ளேன போதை ஏறும்
கருவிழி கலந்து காமுறும் ..

இதழ் மடல் கவிழ்ந்து மூடி
இருதயம் இழுத்துப் பூட்டி
குடத்தினுள் ஏற்றும்
குறுகிய ஒளியென
பற்கள் இடையிடை ஒளிர்ந்து
இன்ப லகரியை
இதழில் மீட்டும் ...

கதவுகள் திறந்து கொள்ள
காமனின் வரவு கூறி
காற்றினில் மிதக்கும் சுகந்தம்
களம் காண விளைகின்ற ஏக்கம்
இதுகாறும் கடந்த மென்மை
இலையென்று உரைத்துடைத்து
மடை திறக்கும் ....
மலர் இதழ்கள் .....

No comments:

Post a Comment