Saturday, December 28, 2013

வேட்கை...



மெல்லென படரும்
தென்றல் என
உன் மேன்மைகள்
என்னை படர்ந்த கணம்
சொல் ஒன்றும் போதவில்லை
அந்த சுகம் பகிர்ந்து விளம்பிவிட ...

கள்ளுண்ட மலரணைய போதை
சுகம் காணாத இடமெங்கும்
இதம் பரவ
தொட்டனைத்தூறும் நீரென
நீ தொட்ட அனைத்திலும்
சுகம் பற்றணைத்து
விரவி சுகம் வளர ..

நாணக் குடை விரிந்து
காதல் மலர் தூவி
காமக் கரை தேட
மொட்டவிழ்ந்த
மனக் குளத்து மலர் ஒன்று
உந்தன் முகம் நாடி விசித்திருக்க
கட்டவிழ்ந்த
உந்தன் கனிந்த முகம்
இதழ் தொட்டணைத்து
சுகம் பகிர ...

உந்தன் இதழ் வழி
வழிந்த ஓர்விடம்
என் உயிர் குடித்து
நிமிர்ந்த வேளையில்
கருமணிக் கண் துளிர்த்த
நீர் பகிர்ந்து நின்றது
கானலின் வேட்கையை ...

No comments:

Post a Comment