Monday, April 28, 2014

உயிரே உறவாடு..




நிலவொழுகும்
நடுநிஷிகளின்
நீள் கரங்களுக்குள்
நிதமும்
சிக்கித் தவிக்கும் பொழுதுகளும் ..

நீளமான உன் கரங்களுக்குள்
நிமிட நொடிகளேனும்
அடங்கிவிட துடிக்கும்
ஆசை மனது.

அணைந்து மிளிரும்
அழகிய மின் விளக்குகளென
ஒளிரும் மின்மினிகள்
உள்ளத்தில் அழகாய்
ஒழிந்து ஒளிரும்
உன் மீதான
காதல் கணங்களுடன்
போட்டியிட்டு சலிக்கிறது ...


தளிர் மேனி படும்
குளிர் தென்றல் சுடும்
உன் அருகாமைக்காய்
உள்ளம் அலைபாயும்

தணியாத காதல்
தளிர் கொண்ட மோகம்
பிரியாத ஆசை
பிறழாத நேசம்
நெஞ்சில்
கருவான உன்னை
கணம்தோறும் நோங்கும்..

வருவாய் என் உயிரே
வரம் தா உன் மனதே ..
உருகிடும் என் உயிரோடு
உயிரே உறவாடு...

No comments:

Post a Comment