Monday, April 28, 2014

காற்றாகி .... வா .


இருள் கடந்தும் பயணிக்கிறது
உன்மீதான
என் விருப்பங்களும்
வேதனைகளும் ..

தொலைவுகளை குறுக்கிய
காதலுக்கு தெரியவில்லை
விளைவுகளை
அறுவடை செய்ய ..

விதையாகி போன
ஆசைகளின் துளிர்ப்பில்
அலர்ந்த மலரில்
அதன் சோகங்கள்
நீர்த்துளிகளென
மினுமினுத்து காய்கிறது ..

இந்த இரவுகளின் முடிவில்
எழுதப்படாத ஒரு
தொடர்கதையின் தொடர் புள்ளிகள்
முற்றுத் தேடி அலைகிறது ..

முடிவுறாத வானமதில்
கனியாத காதல்
நீர் சுமந்து அலைகிறது மேகமென
ஒரு திடீர் தென்றல் அணைப்பில்
அது தன் நீர் சொரிந்து
கலைந்து மறையலாம்
காற்றாகி .... வா .

No comments:

Post a Comment