Monday, April 28, 2014

நினைவுக் காற்று ...



இந்த இரவின்
நிஷப்த இழையை
மெல்லத் தடவிக் கொண்டிருக்கிறது
உன் நினைவுக் காற்று ...
பல இரவுகளை முகாரியாக மாற்றிய
இந்த நினைவுக் காற்று
இன்று மெல்லிய சுகந்தம் ஒன்றை
மெல்லத்தடவி
மோகனம் இசைக்கிறது ...

அடிக்கடி
இதழ்களை தொட்டு தடவி
மீள்கிறது விரல்கள்
உன் முத்த முக்குளிப்பில்
குத்திய
மீசை முடியின்
குறுகுறுப்பு அடங்கவில்லை இன்னும் ...

கை படும் மேனியெங்கும்
கை சுடும் தீயென
கனன்று பூக்கிறது
உன் மீதான இச்சை ...

உன் என் காதலை
காலம் முழுவதும் சுமந்துவிடுவேன் ,,
உன் மீதான
மோக மேகமது நீங்கிவிட்டால் ..

தென்றல் என
உன் தீண்டல் சுகிக்கவில்லை
ஒரு புயலென ஆக்கிரமித்துவிடு
இந்த பூமியெங்கும்
நம் காதல் பூத்திட செய்வேன் .

No comments:

Post a Comment