Monday, April 28, 2014

நேசம்...



வரம்பு மீறிய
உன் மீதான நேசம்
வரவழைக்கிறது
விழிகளில் மழை ...

வாழ்ந்த காதல்
வாழ்க்கைக்கும்
வாழுகின்ற
சோக வாழ்க்கைக்கும்
வாழப் போகும்
ஏக்க வாழ்க்கைக்கும்
இன்றைய கண்ணீர்
போதுமானதாக இருக்கட்டும் ...

உதாசீனங்களால்
உடைக்கப்டும் உள்ளம்
என்றும்
உயிர் வாழ விரும்புவதில்லை

உனக்கான பார்வை
உனக்கான நேசம்
உனக்கான வார்த்தை
உனக்கான முத்தம்
உனக்கான அணைப்பு
..........
உனக்கான எல்லாமே
இன்னும் உனக்காக ...
ஆனால் நீ இல்லை
எனக்காக ...

No comments:

Post a Comment