Monday, April 28, 2014

" உயிர் எங்கே ? உன்னில் உண்டா ?..




எண்ணிலடங்கும்
என் இதய துடிப்புகள்
எண்ணிலடங்கா
உன் நினைவுகளை
சுமந்து கடக்கிறது
கணங்களை ..

என்னில் வண்ணம் தெளித்த
வர்ணத் தூரிகையே
வரைந்து செல்
வருங்கால வழிகாட்டியை

தொலைவுகள் குறுகாத
நினைவுகளை மட்டும்
நிரந்தரமாய் பிரசவிக்கிறது
கருக்கொண்ட காதல்

கைகள் நீட்டுகிறேன்
இணைகின்ற விரல்களில்
பிரிவின் சுவடுகளை
எழுதி செல்கிறாய் நீ

தொலைந்து போன என்னுயிரை
தொடர்ந்தும் தேடுகிறேன்
அது உன்னில் உண்டா
திருப்பி கொடு
திருந்தாத ஜென்மம் அதை
உன் பிரிவெழுதி வஞ்சிக்க .

No comments:

Post a Comment