Monday, April 28, 2014

ஒப்பனைக் காவியம்..




சிவந்த செந்தழல் குழைந்த
கொலுசு கொஞ்சும் இசை விஞ்சும்
அணங்கு நடை பார்த்த அன்னம்
சிரசு நிலம் குடையும்
நிலம் தவழும்
நீளுடை குழைந்த
இடை மருளும் ..

கள்ளுண்ட வண்டென
கண் மருளும்
காதல் மெய் கொண்டு
விரகமுறும் பூந்தண்டு
மெல்லிய விரல் சுமந்த
கணையாழி தொலையும்
மோக பசி கூடி வாடி ..

எங்கும் மலர் சிதறும்
மன்மத பானமொன்றிம்
மது கலந்து மணம் வீசும்
இதழ் கடந்து இன்பம்
எதுவென்று
வெள்ளரிசி பற்கள் தேடும்
இனம் எதுவென்று கூடாது
இணை பிரிந்து மீளும் இதழ் விளிம்பு..

குழல் சுமந்த வெண் பூ அறியாது
என்று கழல் சுமக்கும்
அதன் காந்தள் இதழ் ..
இதழ் சுமக்கும் வர்ணம் அறியாது
எந்த மது குடைந்த
மந்தியொன்று மலர்குடைந்து
மயங்கி மீளும் என்று ..

இருந்தும்
வர்ணம் கொண்ட வாசமல்லிகள்
பின்னிரவுவரை தங்கள்
வாசங்களை நேசங்கள் ஆக்கி
வலிந்து சுமக்கின்றன... நகரும் இராப்பொழுதுகளில்
நாள் தோறும் நாடுபவர் படிக்கும்
ஒப்பனைக் காவியம் இவள் .

No comments:

Post a Comment