Monday, April 28, 2014

முதிராத ஒரு குழந்தை...



முதிராத ஒரு குழந்தை
முதிர்ந்துவிட்ட தோற்றம்
கதிரான களம் தான்
காரணமோ காரியமோ ?

அழகான வெள்ளை அம்மாவின்
பாசம் எனும் கயிற்றில்
பற்றித் தொங்கும்
பால்வடியும்
பருவம் தாண்டிய மகன் ..

ஊன் வளர்ந்து
உடல் வளர்ந்து
எது வளர்ந்தென்ன
மூளை வளராத
முதிர்ந்த குழந்தை இவன் ..

ஆட்சிக் கட்டில்
இவன் ஆடல் ஊஞ்சல்
மிக்சர் தலைவர்
விளையாட்டு கொரங்கு
அன்னை கையில்
பச்சை மண்
அவர் பிடித்தால்
பிள்ளையாரும் இவன் தான்
தொல்லைகளும் இவன்தான் ..

காந்தி பரம்பரையில்
ஒரு சாந்தியை தொடாத
சத்திய புருஷனாம்
தந்தை இழப்புக்கு
ஒரு சந்ததியை காவுகொண்ட
அகிம்ஷா புருஷர்
காந்தி வழித் தோன்றலடா

இத்தாலிக்கு இந்தியாவை
இரவோடு இரவாக
கைமாற்றும் காலம் வரும்
அன்று ..
இன்று கால் பிடிக்கும்
காங்கிரஸ் அறியும்
துரோகத்தின் வாதை .

அவனறியா உலகமிது
அம்மா சொல்தான்
மந்திரமது ..
அவனுக்கும் தெரியவில்லை
தாய்ப்பாசம்
பேய்க்கு கிடையாதென்று ..
நீயும் வெடித்து சிதறலாம்
ஆனால்
வீண்பழி சுமக்க
வீரர்தான் இல்லை ...

No comments:

Post a Comment