Monday, April 28, 2014

கனவு...




என் கனவுத் தொழிற்சாலையில்
கணநேர இடைவெளியின்றி
பிரசவித்து சிரிக்கிறது
உன் நினைவுக் குழந்தை ...

தூரம் தொடர்ந்த
உன் நினைவுக் கரங்களில்
தினம் ஒரு குழந்தையாய்
குழைந்து குலைந்து கிடக்கிறேன்

மையல் கொண்ட சிற்ப்பிஎன
மையம் திறந்து கொள்கிறது
உன் முத்தினை
சொத்தெனக் கொள்ள

உன் அருகாமைகள்
குறுகிய பொழுதும்
குறுகாமல் வாழும்
குன்றில் ஒளிரும்
காதல் விளக்கு.

தென்றலாக வா
உன்னை
தீண்டும் பேறு
அந்த சுடர் பெறட்டும் .

No comments:

Post a Comment