Monday, April 28, 2014

இந்த இரவு ..

 
 
இந்த இரவு
என்னால்
சபிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது

எதற்குமே பயன்படாத
ஏதோ ஒன்றைப் போல்
யாராலும் தீண்டப் படாத
இன்னொன்றைப் போல்
முகம் சுழிக்கப் படும்
நிலையை ஒத்திருக்கிறது
நிகழ்வுகள் ..

அன்பு பாசம்
காதல் காமம்
எல்லாம் கடந்த
நிலையொன்றா என்றால்
எதற்குமே பதில் இல்லை

ஒதுக்கமா
ஒதுங்கலா
விலகலா
வீண் பிடிவாதங்களா
வீணான கற்பனைகளா
எதுவாக இருந்த பொழுதும்
இந்த இரவு
என்னால் சபிக்கப் படுகிறது ..

No comments:

Post a Comment