Monday, April 28, 2014

அலர்ந்த மலர்..




அந்த வனாந்தரத்தின்
எழில் கொழித்த
சோலை ஒன்றின்
மெல் மாலைப் பொழுதின்
ரம்மியங்களை
இழுத்து ஆடையென
சூடியிருந்த
கொன்றை மர நிழல்கூடில்
அன்றிலாய் இணைந்திருந்த
கரம் நான்கும்
காதல் மிகுந்து
களிப்புக் கண்டிருந்த
அந்தகார பொன்மாலையொன்று,,,

மஞ்சள் பூசிய
மான் விழியால்
மன்னவன் வரவு நோக்கி
தன் எழில் குழல் கலைந்தாட
நடை பயில்வதுபோல்
மெல்லிய தென்றலுக்கு
இயைவாய் மெல்லன
தொங்கு சரம் ஆடிய பூக்களை பார்த்து
இச்சரம் மென்மையோ
என்மேல் படர்ந்திருக்கும்
இச்சரம் மென்மையோ
இவள் மேனிதான் கொன்றையொ
இவள் மேல் நீ தான் கொன்றையோ
என மனம் இச்சகம் புரிய
எக்கணமும் மீளாது
அக்கணமே அவன்
ஆய்வுகள் தொடர்ந்தது ..

ஓர் மெல்லிய சர்ப்பமென
மேனியெங்கும் ஊர்ந்த
அவன் திண்ணிய கரம் பிடித்து
போதும் என சலித்து
போதாமல் மனம் கெலித்து
மது உண்ட மலர் என
மயங்கி சரியும்
மெல்லாடை பாரம் தாங்காது
இடை துவள சரியும்
இடது கரம் அதை ஏந்தும் ...
மீறும் மதுக்கரம் தனை பிடித்து
வலக்கரம் ஏதோ கூறும்..

மெல் முகில் களைந்த
நிலவென
மோகம் குழைத்த
முக எழில் நோக்கும்
அவன் கவி மலர்க் கண்கள்
கவிகொள்ள கருத்தேடும்..
கழல் கண்ட கொலுசு
ஒற்றை தொடைகாணும்
அவன் கனிவாயும்
மலர்த்தோளில் ல் மது தேடும் ..

கருக்கொண்ட முகிலென
குழல் அவிழ்ந்தாடும்
அதில் சரம் கொண்ட மழையென
அவனவள் இதழ் தூறும் ..
சொர்க்கத்தின் தாள் திறக்கும்
சுகபோக தருணத்தில்
தேவி என்றான் ..
அத்தனையும் திகட்டிவிட
அலர்ந்த மலர் கூம்பி நின்றாள்
அவள் தேவி அல்ல ..

No comments:

Post a Comment