Monday, April 28, 2014

தீண்டப்படாத நதி ....




மெல்லியலால் இடை தழுவும்
மெல்லிய மேக நிறம் கொண்டு
வளைவுகள் கொண்டு
மேவி மேல் தடவி
உள்ளீர்ந்து உருவகமாகி
தான்தோன்றியாய்
விரப்பிப் பாய்கிறது வெள்ளம் ...

உன் மீதான காதலும்
இந்த நீரைப் போல்
உள்ளீர்ந்து விரவி
உளம் ஈர்த்து
தான்தோன்றியாய்
சல சலத்து பாய்கிறது

இந்த செம்புபுலப் பெயல் நீரன
அன்புடை நெஞ்சம் அரவணைத்து
கள்ளுடை போதை என
காண்கிற போதெல்லாம்
கண்களில் மிளிர்ந்த
காதலில் மிதந்த
காட்டுப் பூ இவள்

நெஞ்சமெனும் கரையிரண்டில்
நெகிழ்ந்து விழும் அருவி ஒன்று
கனவுகளில்
மஞ்சம் நனைத்து
மகிழ்ந்து வழிந்து
கால்க்கடை கடந்து
பயணிக்கிறது நதியென ..

எத்தனை ஜீவன்
எதிர்க் கரை தோன்றினும்
தாகம் மீறி
நீர் குடைய நோங்கினும்..
உன்னால் அருந்தா
உறைபனி நதியென
வாழும் இவள்
தீண்டப்படாத நதி ....

No comments:

Post a Comment