Wednesday, July 17, 2013

உங்கள்


ஒவொரு வார்த்தையின் விளிம்பிலும்
உருகி வழியும் உங்கள்
புரிதலின் ஊனத்தின் வாடை
யாருக்கும் உவப்பானதாய் இருப்பதில்லை .

விளங்க முடியாதா
விளங்கிக் கொள்ள முடியாத
ஏன் விளங்கி கொள்ள விரும்பாத
ஆதிக்கத்தின் பிடியில்
அடங்கி அமிழ்ந்து ததும்பி
வெளி வரும் உங்கள் வார்த்தைகள்
துப்பிய எசில்களாய் அருவெறுப்பாக ..

கோடுகளாலும் புள்ளிகளாலும்
இணைந்த கோலத்தின் மீது
ஊரும் சர்பெமென
உங்கள் அசைவுகள்
விஷத் தன்மையானதாகவும்
விரும்ப முடியாததாகவும் இருக்கிறது ..

நெடுந் தூர பயனமொன்றின் கை கோர்ப்பில்
அடிக்கடி சுரண்டும் நகங்களின் இடுக்கில்
உறையும் இரதங்களின் துர் நாற்றமென
உங்கள் மீது கொண்ட நம்பிக்கை மணக்கிறது ..

வெற்றிடங்களை நிரப்பும்
காற்றின் துணுக்குகளை
கிழித்து வரும்
உங்கள் குரோதப் பார்வைகள்
உங்கள் மேல் கொண்ட நம்பிகையின்
ஆயுளை அடித்துச் செல்வத்தையும்
தவிர்க்க முடிவதில்லை ...

அலரும் மலரின்
மென்மையை ஸ்பரிசிக்க துடிக்கும்
உங்கள் மனங்களுக்கு
அதன் மேன்மைகள்
என்றுமே உவப்பானாதாக
இருக்கப் போவதில்லை

எனவே விடை பெறுங்கள்
உங்களுக்கென தனியானதொரு
தடம் காத்திருக்கலாம் .

No comments:

Post a Comment