Wednesday, July 17, 2013

வலி



 
வழி எங்கினும்
முறிந்து தொங்கிய வண்ணம்
இன்னும் அதன்
பச்சை படர்ந்த கிளைகள் ..
அதன் இருப்பின் இழப்பை
நிச்சயித்து ஓங்கி வளர்கிறது மரம் ..

பல நிச்சயங்கள்
பல பரீச்சயங்கள்
இழப்புகளின் முகவரியில்
எழுதிச் செல்கிறது
வலிகளின் வரிகளை ..

நேற்றுவரை அருகருகே இருந்து
அனைத்து கதைகளையும்
பேசி மகிழ்ந்த
அந்த மரத்தின் கிளை
தன் பிரிவின் தழும்புகளை
அந்த மரத்தில் எழுதிச் செல்ல
எந்த நொடியும் காத்திருக்கிறது ..
பிரிக்க முடியாத
பிரிக்க விரும்பாத
அதன் இருப்பு ஏனோ
பார்பவருக்கு எல்லாம்
பரிகாசமாய் இருந்தாலும்
பற்றுக் கொண்ட கிளைக்கு
அது கொண்ட பாசம் மட்டுமே வலிக்கிறது ...

உதிர்ந்து விட ஒவொரு கணமும்
உருக் குலைந்து உருகும் கிளை
அதன் உளம் கவர்ந்த மரத்தினுக்கே
உக்கி உரமாக காத்திருக்கிறது
அதன் உளம் கவர்ந்த உயிருக்காய் ..

No comments:

Post a Comment