Wednesday, July 17, 2013

ஜாதீ

 

அன்பெனும் ஓடையில் கலந்த
காதல் பண்பெனும் தேன் குடித்த
ஜோடி வண்டுகள் இரண்டு
வாடி கிடந்ததே கிளர்ந்து ...

அகிம்சையும் வீரமும்
அறவே அற்றவர்
வெறும் மேடைப் பேச்சாய்
கொண்டவர் வெறிக்கு
காதல் கொண்டவர் ஆனார் இரை ..

யார் கண்டு பிடித்தது ஜாதி
யாரை கொண்டு புணர்ந்தது ஜாதி
உனக்கும் எனக்கும் குருதி சிவப்புதான்
உனக்கும் எனக்கும் இருதயம் இடப் பக்கம்தான்
நீயும் நானும் உண்பது சோறுதான்
நானும் நீயும் சுவாசிப்பது ஓர் காற்றுத்தான் ..

வாழும் பூமி சாதி பார்க்கவில்லை
வீசும் காற்றும் சாதி பார்ப்பதில்லை
விளையும் விதை சாதி பார்கவில்லை
வேரும் ஓடும் நீரும் உதிரும் இலையும்
ஒன்றுமே சாதி பார்ப்பதில்லை
இதை எல்லாம் நம்பி வாழும்
நீ மட்டும்தான் சாதி பார்க்கிறாய் ..

உயிர் இணைந்த பறவைகளின்
உடல் பிரிக்க வைத்தீர் ஊர் தீ
இன்று உயிர் பிரிந்த
பறவை ஒன்று
உனக்கு வைக்கும் தீ ..

நாய்களுக்கும் உண்டாம் காதல் சுதந்திரம்
பறக்கும் பறவைக்கும் உண்டாம் கலவிச் சுதந்திரம்
ஏன் பேய்களுக்கும் உண்டாம் பூர்வீக பந்தம்
கேவலம் ஆறறிவு ஜீவன் மனிதர்க்கு இல்லையே
அவன் வாழும் சுதந்திரம் ..
மனிதனாய் பிறத்தலிலும் நாய் பேய் மேலடா
நர பலி கேட்கும் சாதி சாமிகளுக்கு
இறுதிச் சடங்கு ஒன்று செய்யடா ..

No comments:

Post a Comment