Wednesday, July 17, 2013

மனது

Photo: மனது
****
உன் நினைவுச் சில்லுகளில்
அகப்பட்டு உதிரும்
என் காதல் மலர்களின்
இதழ்களில் வழிகிறது 
உன் பால் கொண்ட அன்பு

வெறும் வெற்றுக் காகிதத்தில்
வர்ணமற்ற ஒரு கிறுக்கலைப் போல்
உன் எண்ணங்களும் நகர்வுகளும்
அடையாளப் படுத்த முடியாத ஒன்றாக இருக்கிறது ..

யாருமற்ற வனாந்தரத்தில் பூத்திருக்கும்
காட்டு ரோஜாவென சிதறிக் கிடக்கிறது
யாருமற்ற என் தனிமைக் கனவுகள்
உன்னிடம் இருந்து ஒரு அழைப்புக்காய்
காத்திருக்கும் எனக்குள் இருந்து
ஒவொரு கணமும் உதிர்ந்து வழிகிறது
உன் கனவுகளை சுமக்கும் கண்ணீர் ..

உறக்கம் கலைந்த என் இரவுகளின் பிடிக்குள்
ஒருக்களித்து உறங்க முயலும்
என் கனவுக் குழந்தைகள்
அடிகடி கரம் நீட்டி
என் இருப்பினை உறுதி செய்து கொள்கிறது

எங்கிருந்தோ வரும் ஒரு தென்றலில்
உன் வாசம் சுமந்து வரும்
ஒரு தென்றலின் ஸ்பரிசத்துக்காய்
நாளெல்லாம் காத்திருகிறது மனது
நான் நீ நாமாகும் பொழுதுக்காக ..

உன் நினைவுச் சில்லுகளில்
அகப்பட்டு உதிரும்
என் காதல் மலர்களின்
இதழ்களில் வழிகிறது
உன் பால் கொண்ட அன்பு

வெறும் வெற்றுக் காகிதத்தில்
வர்ணமற்ற ஒரு கிறுக்கலைப் போல்
உன் எண்ணங்களும் நகர்வுகளும்
அடையாளப் படுத்த முடியாத ஒன்றாக இருக்கிறது ..

யாருமற்ற வனாந்தரத்தில் பூத்திருக்கும்
காட்டு ரோஜாவென சிதறிக் கிடக்கிறது
யாருமற்ற என் தனிமைக் கனவுகள்
உன்னிடம் இருந்து ஒரு அழைப்புக்காய்
காத்திருக்கும் எனக்குள் இருந்து
ஒவொரு கணமும் உதிர்ந்து வழிகிறது
உன் கனவுகளை சுமக்கும் கண்ணீர் ..

உறக்கம் கலைந்த என் இரவுகளின் பிடிக்குள்
ஒருக்களித்து உறங்க முயலும்
என் கனவுக் குழந்தைகள்
அடிகடி கரம் நீட்டி
என் இருப்பினை உறுதி செய்து கொள்கிறது

எங்கிருந்தோ வரும் ஒரு தென்றலில்
உன் வாசம் சுமந்து வரும்
ஒரு தென்றலின் ஸ்பரிசத்துக்காய்
நாளெல்லாம் காத்திருகிறது மனது
நான் நீ நாமாகும் பொழுதுக்காக ..

No comments:

Post a Comment