Wednesday, July 17, 2013

புனிதம் ..


Disabled child in a wheelchair 
 
வான்வெளியின் வண்ணங்களை
வாரித் தழுவும் மேகங்களை
ஊன் தடவும் பேறு பெறவில்லை
எனினும் பெங்குவின் சாதனைப் பறவை ..

ஓங்கி வளர முடியாத பொழுதும்
ஒரு கிளை பிடித்து தான் பரவி
தளிர்திடும் முசுட்டை கொடுக்கும்
பல நோய் நிவாரணி ..

ரெட்டைக் கிளையோடு பிறந்த பனை
பழம் தரத் தவறியதில்லை
ஓட்டிபிறந்த வாழை
சுவை தர மறுத்ததில்லை

மாறுதல்களோடு காணும்
மனிதன் வணங்கும்
இறைவனும் சிங்க முகனாம்
மச்ச அவதாரமாம்
அவர்கள் எச்சங்களாய் பிறந்த
எம்மவர் எல்லாம்
இறைவன் அன்றோ ..

புலன் ஒன்று இழந்து
புறம் தன்னில் தவழ்ந்தாலும்
புலனெங்கும் அறிவு மயம்
இவர்கள் அகம் எங்கும் அன்பு மயம் .

இழந்தவைகளை நினையாது
இருப்பவைகளை வாரி வழங்கும்
இவர்கள் இருதயம் வேண்டும் ..
கறை ஒன்று படியாது கரம் கொண்டு
தலை நீவும் கணம் ஒன்று
இவர்கரம் தன்னில் பெற வேண்டும் ..

மழை நீர் காணா
புனிதம் இவர் கண்ணீர்
மனம் தான் சோர்வுறா
தீரம் இவர் நெஞ்சம் ..
இறைவன் குடியிருக்கும்
இனிய ஆலயம் இவர்கள் இதயம்
ஒருமுறை உட் புகுந்து பார்
எங்கும் காணா
இனிமையும் அமைதியும்
இயல்பில் இணைந்திடும் .

No comments:

Post a Comment