Wednesday, July 17, 2013

இப்படிதான் வாழ்கிறது மனிதம்

 

மனிதம் கீறும்
மனிதக் கத்திகளின்
முனை தடவி ஒழுகும் குருதி
ஆளுக்கு ஒரு நிறம் காட்டவில்லை ...

இறப்பின் பகை கொளுத்தி
எரியும் தீக் காங்குகள் எதுவும்
ஜாதிக்கு ஒரு சாம்பலைத் தருவதில்லை ..

உடல் அழுகி ஒழுகும் ஊனத்தின் மேல்
புழுத்து நெளியும் துர் நாற்றப் புழுக்கள் என
ஜாதி , இன , மத வெறிகள்
யாராலும் தீண்ட விரும்பப் படாதவையாக இருக்கிறது ..

மதத்தை வளர்கிறேன் என
மனிதனை கொல்வதும்
இனத்தை வளர்கிறேன் என
மொழியை கொல்வதும்
மொழியை வளர்கிறேன் என
இனத்தை அளிப்பவர்களும்
ஏனோ மனிதம் கொன்று
மற்றவைகளை வளர்கின்றனர் ..

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
இதை நன்றே சொல்கின்றனர்
நரம்பற்ற நாக்கென்று
வரம்பற்று பேசுகின்ற
நாடி தளர்ந்திட் கிழ பழசுகளும்
ஜாதி வெறிகொண்டு பாயும் நாய்களென ..

மனிதம் விற்று மதத்தை வாங்குபவனே
தன் புனிதம் விற்று வெறியை வாங்குகிறான்
இறைமை விற்று இனத்தை தாங்குபவனே
அவன் முறைமை அற்று முடிவை தேடுகிறான்

தெருவெங்கும் மேடை கட்டி
உருவமிலானுக்கு ஏன் ஒன்பது கோயிலென
ஓலமிடும் அவன் வீட்டில் தங்கத்தில் சாமி சிலை ..
ஜாதிகள் இல்லையடி பாப்பா
என தாரணி முழங்க கூவுகிறான்
அவன் வீடில் ஜாதிக்கு ஒரு கோப்பை ..
யாதும் ஊரே யாவரும் கேளீர்
நீயும் நானும் ஒருதாய் பிள்ளை என்கிறான்
பின்னால் இவன் மதராசி என்கிறான்

இப்படிதான் வாழ்கிறது மனிதம்
இதில் எப்படி ஐயா வாழும் இங்கே புனிதம் ?

No comments:

Post a Comment