Wednesday, July 17, 2013

சாபம்

Photo: சாபம்
*****
மரத்தினில் ஒளிரும்
மகரந்த தேன்  சுமந்த
மலர் ஒன்று வாழ
நாள் ஒன்று கொண்டது சாபம் .

மெல்லியலாள் கொள்ளும் கற்பியல் வாழ்வில்
கொள்ளும் கவரி மான்
மயிர் ஒன்று நீர்பின் உயிர் வாழாமை கொண்டது சாபம் .

எங்கும் விரவும் இருளுன் போர்வைக்குள்
நுழைந்து கொள்ளும் பூமியின் நகர்வில்
புதைந்து கொள்ளும் நாட்களின் முடிவும் நீட்சியும்
கொண்டது இருண்மையில் சாபம் 

எங்கோ தனிமையில் எரிகின்ற விரகத்தில்
இருமனம் கொண்டது காதலின் சாபம் .

தேன்  உண்ணும் வண்டுகள்
தெவிட்டாமல் தின்று செரித்திட
கருக் கொண்டு குலையும்
பூவின் உரு கொண்ட சாபம் .

பூரணை நிலவென
பொலிந்திடும் ஒளியினில்
பிறை உதறும் தான் கொண்ட சாபம் .

ஒரு நிலவே ஒளி  விளக்கென
ஊர் தூங்கும் வேளையில்
ஒருக்களித்து பசி வயிறு தடவும்
ஏழை தான் கொண்டது சாபம்

ஊருக்கு உதவாத பிள்ளையும் பெண்டிரும்
பெற்றவர் தமக்கு ஒரு கவளம் சோறது சாபம் .

கற்போடு வாழ்ந்தும்
கரும் வீரனின் மனைவியாம் சீதை 
செந்  தணல் புகுந்தது சாபம் ..

கொற்றவனாய் வாழ்ந்தும்
கொடுங் கோலனுக்கு நட்பென்று
உற்றதால் கர்ணன்
புகழ் சற்று கெட்டது சாபம் .

உன்னையும் என்னையும்
ஒருதலைப்பின் கீழ்
உக்கார்ந்து எழுத
கவிமகள் இட்டது சாபம்  ...

ஒற்றை ஆப்பிளை
உண்டதன் மூலமாய்
உலகில் உன்னையும் என்னையும் 
யாவையும் உருக் கொள்ள வைத்த
ஆதாம் ஏவாளும் கொண்டது சாபம் .

சாபங்கள் இல்லையெனில்
சாதனையும் இல்லை
சோதனையும் இல்லை
யார் எவையும் இல்லை..

மரத்தினில் ஒளிரும்
மகரந்த தேன் சுமந்த
மலர் ஒன்று வாழ
நாள் ஒன்று கொண்டது சாபம் .

மெல்லியலாள் கொள்ளும் கற்பியல் வாழ்வில்
கொள்ளும் கவரி மான்
மயிர் ஒன்று நீர்பின் உயிர் வாழாமை கொண்டது சாபம் .

எங்கும் விரவும் இருளுன் போர்வைக்குள்
நுழைந்து கொள்ளும் பூமியின் நகர்வில்
புதைந்து கொள்ளும் நாட்களின் முடிவும் நீட்சியும்
கொண்டது இருண்மையில் சாபம்

எங்கோ தனிமையில் எரிகின்ற விரகத்தில்
இருமனம் கொண்டது காதலின் சாபம் .

தேன் உண்ணும் வண்டுகள்
தெவிட்டாமல் தின்று செரித்திட
கருக் கொண்டு குலையும்
பூவின் உரு கொண்ட சாபம் .

பூரணை நிலவென
பொலிந்திடும் ஒளியினில்
பிறை உதறும் தான் கொண்ட சாபம் .

ஒரு நிலவே ஒளி விளக்கென
ஊர் தூங்கும் வேளையில்
ஒருக்களித்து பசி வயிறு தடவும்
ஏழை தான் கொண்டது சாபம்

ஊருக்கு உதவாத பிள்ளையும் பெண்டிரும்
பெற்றவர் தமக்கு ஒரு கவளம் சோறது சாபம் .

கற்போடு வாழ்ந்தும்
கரும் வீரனின் மனைவியாம் சீதை
செந் தணல் புகுந்தது சாபம் ..

கொற்றவனாய் வாழ்ந்தும்
கொடுங் கோலனுக்கு நட்பென்று
உற்றதால் கர்ணன்
புகழ் சற்று கெட்டது சாபம் .

உன்னையும் என்னையும்
ஒருதலைப்பின் கீழ்
உக்கார்ந்து எழுத
கவிமகள் இட்டது சாபம் ...

ஒற்றை ஆப்பிளை
உண்டதன் மூலமாய்
உலகில் உன்னையும் என்னையும்
யாவையும் உருக் கொள்ள வைத்த
ஆதாம் ஏவாளும் கொண்டது சாபம் .

சாபங்கள் இல்லையெனில்
சாதனையும் இல்லை
சோதனையும் இல்லை
யார் எவையும் இல்லை..

No comments:

Post a Comment