Wednesday, July 17, 2013

கனவுகளுடன் தற்காலிகமாய் கதியற்றவள்

Photo: வேப்ப மரத்து காற்றும்
வெறும் வயிற்றில் பழஞ்சோறும்
கூழாவடி பாம்பு புற்றும்
குறுக்கே நீளும் சிற்ரோடையும்
வாளாவிருக்கும் ஆலமரமும்
வடிவாச்சியின் கச்சான் கடையும்
ஈச்ச மரத்தின் கருத்த பழங்களும்
பிள்ளையார் கோவிலின்
குமார குருக்களும்
சமரசம் பண்ணும் தண்டபாணி ஐயாவும்
மகிழ மரத்து பெண்டிர் கூட்டமும்
புளிய மரத்து பொடியள் வட்டமும்
வட்டமடிக்கும் வாண்டுகள் எல்லாமும்
சொல்லாமல் கலைந்தது ஓர் நாள்
சுகம் எல்லாம் இழந்தது பல நாள் ..

சொந்த நாட்டிலே சுகமில்லை
சுவாசிக்க சுதந்திரமாய் நாதியில்லை
சிறுபான்மை இனமென
சின்னத்தனமாய் கூறினர்
வெகுண்டு புலி என புறப்பட்ட கூட்டத்தில்
சில நரிகளும் புகுந்தன காலவோட்டத்தில்
இன விடுதலை வேள்வியில்
நெஞ்சில் அடிபட்டு சாய்ந்தன புலிகள்
மீந்த நரிகளின் கூட்டத்துள்
வாழும் வகையற்ற மானினம்
மாண்பு மிக்க மறவர் இனம்
மானம் தானும் காக்கும் நோக்கில்
மாற்று இடம் தேடி நகர்ந்தம்மா
மாறா ரணம் சுமந்து நாட்டை கடந்ததம்மா ..

தேசமெங்கும் அகதியாய்
தேற்ற ஒரு கரம் தேடி
திக்கெல்லாம் சிதறிய
ஒரு கூட்டு பறவைகள்
அவற்றின் உயிர்ப்பு அறியாமலே
உலா வருகின்றன
உறவுகளின் இருப்பை தேடி ..

பிச்சை காரர் என்கின்றனர்
சோற்றில் உப்பில்லை என்கின்றனர்
ஈழ நாய்கள் என்கின்றனர்
பார் போற்ற வாழ்ந்த வம்சமடா
பார் ஒரு நாள் ஈழம் வரும்
நாயாய் வாழ்வது மேல் என்கிறேன்
உன் போல் நயவஞ்சகங்களை சுமந்து வாழ்வதை விட ..

எம் போல் கதியற்றோர்
இந்த ஆண்டு மட்டுமே என்பது லட்சமாம்
நாடு கடந்து வாழ்ந்தாலும்
நம்முள் ஈரம் வீரம் இன பாசம் இருக்குதடா
நாட்டுக்குள் நீங்கள் வாழ்ந்தாலும்
ஜாதியாலும் அரசியல் சாகடையாலும்
நாறிப் போய்  இருக்குதடா பலர் நாள் பொழப்பு ..

வேற்று நாட்டில் வேறு வேறாய் நாம் வாழ்ந்தாலும்
எங்கள் மூச்சுக் காற்றில்
சுதந்திரத்தின் வேட்கை வீசுமடா
சொந்த நாட்டிலே சுடுகாட்டுக்குள் வாழ்வதுபோல்
உங்கள் அனைவர் வாழ்விற்கு மத்தியில்
சுழலும் உலகில் சுதந்திரமாய் வாழ்ந்தாலும்
சுடுகாடாய் போகும் எம் தேசத்தின் விடுதலைக்காய்
வித்தாக காத்திருக்கும் கதியற்ற கரிய புலிகள் நாங்கள் ..

வரும் ... அந்த நாள் வரும்
வண்ணத்து பூச்சிகளாய்
என் தேசத்தை முத்தமிட்டு  வட்டமிடும்
வர்ணம் நிறைந்த அந்த வாழ்க்கை
என் அடுத்த சந்ததிக்கு என்றாலும் ..

கனவுகளுடன்
தற்காலிகமாய் கதியற்றவள் . 

வேப்ப மரத்து காற்றும்
வெறும் வயிற்றில் பழஞ்சோறும்
கூழாவடி பாம்பு புற்றும்
குறுக்கே நீளும் சிற்ரோடையும்
வாளாவிருக்கும் ஆலமரமும்
வடிவாச்சியின் கச்சான் கடையும்
ஈச்ச மரத்தின் கருத்த பழங்களும்
பிள்ளையார் கோவிலின்
குமார குருக்களும்
சமரசம் பண்ணும் தண்டபாணி ஐயாவும்
மகிழ மரத்து பெண்டிர் கூட்டமும்
புளிய மரத்து பொடியள் வட்டமும்
வட்டமடிக்கும் வாண்டுகள் எல்லாமும்
சொல்லாமல் கலைந்தது ஓர் நாள்
சுகம் எல்லாம் இழந்தது பல நாள் ..

சொந்த நாட்டிலே சுகமில்லை
சுவாசிக்க சுதந்திரமாய் நாதியில்லை
சிறுபான்மை இனமென
சின்னத்தனமாய் கூறினர்
வெகுண்டு புலி என புறப்பட்ட கூட்டத்தில்
சில நரிகளும் புகுந்தன காலவோட்டத்தில்
இன விடுதலை வேள்வியில்
நெஞ்சில் அடிபட்டு சாய்ந்தன புலிகள்
மீந்த நரிகளின் கூட்டத்துள்
வாழும் வகையற்ற மானினம்
மாண்பு மிக்க மறவர் இனம்
மானம் தானும் காக்கும் நோக்கில்
மாற்று இடம் தேடி நகர்ந்தம்மா
மாறா ரணம் சுமந்து நாட்டை கடந்ததம்மா ..

தேசமெங்கும் அகதியாய்
தேற்ற ஒரு கரம் தேடி
திக்கெல்லாம் சிதறிய
ஒரு கூட்டு பறவைகள்
அவற்றின் உயிர்ப்பு அறியாமலே
உலா வருகின்றன
உறவுகளின் இருப்பை தேடி ..

பிச்சை காரர் என்கின்றனர்
சோற்றில் உப்பில்லை என்கின்றனர்
ஈழ நாய்கள் என்கின்றனர்
பார் போற்ற வாழ்ந்த வம்சமடா
பார் ஒரு நாள் ஈழம் வரும்
நாயாய் வாழ்வது மேல் என்கிறேன்
உன் போல் நயவஞ்சகங்களை சுமந்து வாழ்வதை விட ..

எம் போல் கதியற்றோர்
இந்த ஆண்டு மட்டுமே என்பது லட்சமாம்
நாடு கடந்து வாழ்ந்தாலும்
நம்முள் ஈரம் வீரம் இன பாசம் இருக்குதடா
நாட்டுக்குள் நீங்கள் வாழ்ந்தாலும்
ஜாதியாலும் அரசியல் சாகடையாலும்
நாறிப் போய் இருக்குதடா பலர் நாள் பொழப்பு ..

வேற்று நாட்டில் வேறு வேறாய் நாம் வாழ்ந்தாலும்
எங்கள் மூச்சுக் காற்றில்
சுதந்திரத்தின் வேட்கை வீசுமடா
சொந்த நாட்டிலே சுடுகாட்டுக்குள் வாழ்வதுபோல்
உங்கள் அனைவர் வாழ்விற்கு மத்தியில்
சுழலும் உலகில் சுதந்திரமாய் வாழ்ந்தாலும்
சுடுகாடாய் போகும் எம் தேசத்தின் விடுதலைக்காய்
வித்தாக காத்திருக்கும் கதியற்ற கரிய புலிகள் நாங்கள் ..

வரும் ... அந்த நாள் வரும்
வண்ணத்து பூச்சிகளாய்
என் தேசத்தை முத்தமிட்டு வட்டமிடும்
வர்ணம் நிறைந்த அந்த வாழ்க்கை
என் அடுத்த சந்ததிக்கு என்றாலும் ..

.
கனவுகளுடன்
தற்காலிகமாய் கதியற்றவள்

No comments:

Post a Comment