Wednesday, July 17, 2013

உன் தோழியாக நான்




ஒவொரு நிமிடத்தையும்
நீ எனக்காகவே செதுக்குகின்றாய்
உன் பக்கங்கள்
புரட்டப் படும்போதெல்லாம்
என் பாதிப்பின் வடுக்கள் பதுங்குகிறது
எட்டி நின்று கை குலுக்கும்
என் எண்ண அலைகளை
சட்டென்று கட்டிப் போடுகிறாய்
ஒரு புள்ளியில் .

எதற்கும் அடங்காத
குதிரையின் கடிவாளங்கள்
உன் கைக்கு சொந்தமாகவேண்டும் என
உன் ஒவ்வொரு நகர்விலும்
உணர்த்துகிறாய் ..

எனக்காக சுவாசிக்கும்
எனக்காக வாசிக்கும்
எனக்காக வசிக்கும்
உன் எண்ணங்களுக்கு சொந்தமாக
ஒரு வண்ணக் கிளியை தேடுகிறேன்
உன்னை வட்டமடிக்க
உன் வளங்களை வாரி கொள்ள

எத்தனை காலம்
என் இதயத்தின் அருகில்
காவல் இருப்பாய்
இரவல் கேட்கிறார்கள்
கொஞ்சம் இளைப்பாறி போக ..
கிளைகளற்ற மரம் இது
கிள்ளைகள் பாடா மரமிது
கிளர்சிகளில்லா அசைவிது
இருந்தும் ஒரு பாலைவனத்தின்
பாதுகாக்கும் காவல் என நீ

எனக்காக காவல் காக்கிறாய்
எனக்காக கண்ணீர் சிந்துகிறாய்
எனக்காக கற்பனை காண்கிறாய்
இது எதற்கும் தகுதிகள் அற்றவளாய்
உன் தோழியாக நான் .
 
 

No comments:

Post a Comment