Wednesday, July 17, 2013

கோமாளி.

Photo: ஷபா இந்த கோமாளி தொல்லை தாங்கலை என்னபத்தி கவிதை எழுத்து என்ன பத்தி கவிதை எழுதுன்னு சொல்லி என்ன டாச்சர் பண்ணிச்சு சரி ஆசப் படுறாங்க காசா பணமா கவிதை தானே அப்டின்னு எழுத ஆரம்பிச்சேன் - மிடில 
********
பித்தனுமில்லை
சித்தனுமில்லை
தத்துவமுமில்லை
தர்கமுமில்லை
காரணமுமில்லை
பொருளிமில்லை செயலுக்கு..

வேதாந்தம் சொல்வான்
வீண் வாதம் செய்வான்
காண்போரை எல்லாம்
கல கலக்க வைப்பான்

பெயர் ஒன்றும் இல்லை
வெளியில் தெரியும் 
முகம் ஒன்று இல்லை
தானாடி நானாடி ஊனாடி
உள்ளிருந்து கிளரும் சொல்லாடி
சுவை கோடி கொண்டாடி
வருவாண்டி பொம்மைத் தேரோடி ..

மனமில்லை என்பான்
கொள்ளை கொள்ளும்
மனதொன்று கொள்வான் ..
முகமில்லை என்பான்
முகமறிய ஆவல் கொடுப்பான் ..
பல தடவை சிரித்தேன்
பல தடவை முறைத்தேன்
சில தடவை கிழித்தேன்
சிதையாது கோமாளி சிரிக்கும் வரை .

எப்படி இருப்பான் ?
முகமூடி அழகோ
இல்லை முகம் நாடி கிழமோ ?
கண் மையிட்ட கருப்போ
வெண் பால் நுரை கொண்ட வெளுப்போ

முக நூல் உலவும்
முழு லூசுகள் பலவுள்
நீ அரை லூஸா இல்லை முழு லூஸா ?
உன் சுவர் லூஸா ? இல்லை சுத்தமாய் நீ வேஸ்ட்டா ?

எவனென்று அறிந்துவிட
கன்னம் ஒன்று வைக்கிறேன்
கடு கதியில் சிக்கிவிடு .
நீ சின்னபின்னம் ஆகுவதற்குள் 

பித்தனுமில்லை
சித்தனுமில்லை
தத்துவமுமில்லை
தர்கமுமில்லை
காரணமுமில்லை
பொருளிமில்லை செயலுக்கு..

வேதாந்தம் சொல்வான்
வீண் வாதம் செய்வான்
காண்போரை எல்லாம்
கல கலக்க வைப்பான்

பெயர் ஒன்றும் இல்லை
வெளியில் தெரியும்
முகம் ஒன்று இல்லை
தானாடி நானாடி ஊனாடி
உள்ளிருந்து கிளரும் சொல்லாடி
சுவை கோடி கொண்டாடி
வருவாண்டி பொம்மைத் தேரோடி ..

மனமில்லை என்பான்
கொள்ளை கொள்ளும்
மனதொன்று கொள்வான் ..
முகமில்லை என்பான்
முகமறிய ஆவல் கொடுப்பான் ..
பல தடவை சிரித்தேன்
பல தடவை முறைத்தேன்
சில தடவை கிழித்தேன்
சிதையாது கோமாளி சிரிக்கும் வரை .

எப்படி இருப்பான் ?
முகமூடி அழகோ
இல்லை முகம் நாடி கிழமோ ?
கண் மையிட்ட கருப்போ
வெண் பால் நுரை கொண்ட வெளுப்போ

முக நூல் உலவும்
முழு லூசுகள் பலவுள்
நீ அரை லூஸா இல்லை முழு லூஸா ?
உன் சுவர் லூஸா ? இல்லை சுத்தமாய் நீ வேஸ்ட்டா ?

எவனென்று அறிந்துவிட
கன்னம் ஒன்று வைக்கிறேன்
கடு கதியில் சிக்கிவிடு .
நீ சின்னபின்னம் ஆகுவதற்குள்

No comments:

Post a Comment