Wednesday, July 17, 2013

கரும் புலிகள்

 

நேரம் குறித்து
நிமிடம் குறித்து
காலம் குறித்து
உயிரில் தீ மூட்டி
காலனை அழைக்கும்
கர்ம வீரர் தாம் கரும் புலிகள்

கொண்ட கொள்கைக்காய்
ஈகம் ஈயும் தியாகம் கொண்டவர்
தாகம் தன்னில் தாயகம் அடக்கி
தலைவனை நினைத்து
வெடித்து சிதருவர் ..

ஜாதிக்காக பலி எடுக்கும்
ஈனர்கள் வாழும் பூமியில்
தன இனத்துக்காக
தன்னை உயிர் பலி கொடுக்கும்
உத்தம ஆத்மாக்கள்

இன்று நீ நாளை நான்
இதுதான் இவர்கள் தாரக மந்திரம்
இன்று நான் இல்லையே என
ஏங்கும் இவருள்ளம் கண்டு
உறுதி கண்டு உருகி நெகிழும்
பாறைகள் பலவுண்டு ...

செம் பிழம்பாய் வெடித்து
தீயின் நா சூழ்ந்து
திக்கெட்டும் பகவரை
திகில் சூழ
தில்லாக புறப்படுவார் இவர் ...

மரணம் ஒரு நாள் வரும்
அதை மகத்தானதாய் மாற்றும் திடம்
மறவர் இவர்களுக்கே உரிய வரம்
மாவீரரான ஆன கரிய புலிகளே
உங்கள் மா வீரம் போற்றும் நாள் வரும்
உமை மனம் நிறைய வாழ்த்தும் ஊர் சனம் .

No comments:

Post a Comment